நாடு முழுவதும் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் அனைத்தும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் மற்றும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகள் மூலமாக நிரப்பப்பட்டு வருகின்றன. அதிலும்சில துறைகளில் காலி பணியிடங்கள் இருப்பதாகவும் அவற்றை விரைவில் நிரப்ப வேண்டும் எனவும் தொடர்ந்து கோரிக்கைகள் எழுந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் ரயில்வேயில் மூன்று லட்சத்திற்கும் மேலான பணியிடங்கள் காலியாக இருப்பதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ் தெரிவித்துள்ளார். இது தொடர்பான காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூனா […]
