சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 24 1/2 கிலோ கஞ்சாவை ரயில்வே போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். சென்னை சென்ட்ரலுக்கு வருகின்ற எக்ஸ்பிரஸ் ரயிலில் கஞ்சா கடத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் எம்.ஜி.ஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் காவல் ஆய்வாளர் சசிகலா மற்றும் ரயில்வே போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஹவுராவிலிருந்து புறப்பட்டு சென்னைக்கு வந்து சேர்ந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் 20 கிலோ கஞ்சா இருப்பது போலீசார் சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. அதேபோல் விசாகப்பட்டினத்திலிருந்து […]
