பாகிஸ்தானில் விரைவு ரயில்கள் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டதில் 63 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மில்லட் எக்ஸ்பிரஸ் ரயிலானது, சர்கோதாவிற்கு, கராச்சியிலிருந்து புறப்பட்டு சென்றுள்ளது. அப்போது எதிர்பாராதவிதமாக தண்டவாளத்தில் தடம்புரண்டதில், எதிரில் வந்து கொண்டிருந்த சர் சையத் எக்ஸ்பிரஸ் ரயில் மீது நேருக்கு நேர் மோதியதில் இக்கொடூர விபத்து ஏற்பட்டிருக்கிறது. இதில் பிறந்த குழந்தை மற்றும் 81 வயது மூதாட்டி உட்பட சுமார் 63 நபர்கள் பரிதாபமாக பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பலியானவர்களில் 51 நபர்களின் பெயர்கள் […]
