மயிலாடுதுறையில் ரயிலில் அடிபட்டு இளைஞர் உயிரிழந்துள்ளார். மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள குத்தாலம் அருகே இருக்கும் சேத்திரபாலபுரம் ரயில்வேகேட் பகுதியில் நேற்று முன் தினம் காலை ரயிலில் அடிபட்டு இளைஞர் ஒருவர் உயிரிழந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே போலீசார் இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். பின் இது குறித்து விசாரணை மேற்கொண்டதில் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தவர் குற்றாலம் அருகே உள்ள பிடாரி அம்மன் […]
