பீகார் மாநிலம் பெகுசராயில், ரயில் பயணியின் செல்போனை பறிக்க முயன்ற திருடனை, அப்படியே பிடித்து 15 கி.மீ. தூரம் ஜன்னலில் தொங்கவிட்டு, போலீசில் ஒப்படைக்கப்பட்டார். சோன்பூர்-கடிஹார் ரயில் பிரிவில் உள்ள சாஹேப்பூர் கமல் நிலையத்தில் இந்த சம்பவம் நடந்தது. இங்கு சத்யம் குமார் என்ற ரயில் பயணியின் செல்போனை திருடி இரண்டு திருடர்கள் ஓடினர். இதில் ஒரு திருடன் தப்பித்து விட்டான். ஆனால் இரண்டாவது திருடனை ரயிலின் ஜன்னல் வழியாக பயணிகள் பிடித்தனர். இதற்கிடையில் ரயில் புறப்பட்டது. […]
