ரப்பர் தொழிலாளர்களுக்கும் முக்கிய அறிவிப்பு ஒன்றை தமிழக வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் வெளியிட்டுள்ளார். இது தொழிலாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தமிழக வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் நாகர்கோவிலில் நேற்று காலை வனத்துறை மற்றும் ரப்பர் கழக அதிகாரிகளுடன் திடீரென்று கலந்தாய்வு மேற்கொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் தெரிவித்ததாவது: “தற்போது மாவட்டங்கள் தோறும் பயணம் செய்து வனத்துறை சார்ந்த பொது மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்து அவற்றை தீர்ப்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறேன். தமிழக வனத்துறையின் கட்டுப்பாட்டில் […]
