சென்னை அண்ணாநகர் அம்மா அரங்கத்தில் லேப் டெக்னீசியன்கள் நடத்தும் தரக் கட்டுப்பாடு குறித்த கருத்தரங்கு நடைபெற்று வருகிறது. இதில் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் திரு மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் கூறியதாவது, “மருந்தகங்களில் ரத்த பரிசோதனை உள்ளிட்ட சோதனைகள் செய்வது தொடர்பாக விரைவில் முடிவு எடுக்கப்படும். 60 நாட்கள் கால அவகாசத்துக்குள் லேப் டெக்னீசியன்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். அதிமுக அரசு 5 லட்சம் கோடி கடனோடு, 25,436 தொற்றுகளோடு தமிழகத்தை விட்டு […]
