தெப்ப திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டு சென்றுள்ளனர். ஈரோடு மாவட்டம் திகனார் கிராமத்தில் பிரசித்தி பெற்ற ரங்கசாமி மல்லிகார்ஜுனா கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் வருடந்தோறும் தெப்பத் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த வருடத்திற்கான தெப்பத் திருவிழா நேற்று முன்தினம் கணபதி பூஜையுடன் தொடங்கியுள்ளது. இதனை அடுத்து நேற்று காலை சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டது. அதன் பின் மதியம் 12 மணிக்கு சுவாமி மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சப்பரத்தில் […]
