இமாச்சலப் பிரதேசம் முதல் மந்திரி ஜெய்ராம் தாக்குர் சிம்லாவில் நடைபெற்ற பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். அதில் ரக்சாபந்தன் திருவிழாவை முன்னிட்டு அவருக்கு பள்ளி மாணவ மாணவிகள் ராக்கி கட்டி விட்டு ஆரத்தி எடுத்துள்ளனர். ரக்சா பந்தன் தினம் வருடம் தோறும் சகோதரர் மற்றும் சகோதரியின் பாசத்தினை வெளிப்படுத்தும் விதமாக முக்கியத்துவம் வாய்ந்த திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. ரக்சா பந்தன் தினம் நாளை நாடு முழுவதும் கொண்டாடப்பட இருக்கின்றது. இதனை முன்னிட்டு ராக்கி கயிறுகள் விற்பனையும் […]
