மதுபோதையில் உள்ளாடையுடன் ஓட்டுநர் ஒருவர் பேருந்து நிலையத்தில் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள புதிய பேருந்து நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நவீன வசதிகளுடன் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. இதனால் சென்னை, அரக்கோணம், சோளிங்கர், திருத்தணி மார்க்கமாக செல்லும் பேருந்துகள் மட்டுமே புதிய பேருந்து நிலையத்தின் ஒரு பகுதியில் செயல்படும் தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து செல்கின்றன. இதனால் அங்கு பயணிகளின் நடமாட்டம் குறைவாக காணப்படும். மேலும் இரவு நேரங்களில் சில […]
