தமிழ்நாட்டைச் சேர்ந்த மூன்று மீனவர்களை இலங்கை நீதிமன்றம் நிபந்தனைகளுடன் விடுவிக்க உத்தரவு பிறப்பித்திருக்கிறது. தமிழ் நாட்டை சேர்ந்த மீனவர்கள் இலங்கை படையினரால் கைது செய்யப்படுவது அடிக்கடி நடக்கும் நிகழ்வாக இருக்கிறது. இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஜெகதாபட்டினத்தை சேர்ந்த மீனவர்கள் மூன்று பேர் கடந்த 20ஆம் தேதி அன்று மீன்பிடிக்க சென்றுள்ளனர். எல்லையை தாண்டி சென்று மீன் பிடித்தார்கள் என்று இலங்கை கடற்படை அவர்களை கைது செய்தது. அதனை தொடர்ந்து யாழ்ப்பாணத்தில் இருக்கும் சிறையில் அடைத்து விட்டனர். […]
