நீதிமன்றத்தில் பணி கேட்டு யாரும் அமைச்சர் ரகுபதி வீட்டிற்கு வர வேண்டாம் என்று போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள கீழமை நீதிமன்றங்களில் 3557 பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து, காலி பணியிடங்களுக்கான தேர்வு கடந்த மாதம் தமிழகம் முழுவதும் எழுதப்பட்டது. இதற்கிடையில் புதுக்கோட்டையைச் சேர்ந்த மாநில சட்டத்துறை அமைச்சர் ரகுபதியிடம் பரிந்துரை கடிதம் பெறுவதற்கு நேரடியாகவும், கட்சிப் பிரமுகர்கள் வழியாகவும் பலர் முயற்சி செய்து வருகின்றன. இதை அறிந்த அமைச்சர் ரகுபதி “இது போன்று யாரும் […]
