தமிழகம், கேரளா, கர்நாடகா ஒருங்கிணைந்தால் மட்டுமே யானைகள் வேட்டையை தடுக்க முடியும் என சென்னை உயர்நீதிமன்றம் யோசனை கூறியுள்ளது. இது தொடர்பான மனுவை விசாரித்த நீதிமன்றம் வனப்பகுதியில் வளர்ந்துள்ள அந்நிய மரங்களை அகற்றி முன்னோடி மாநிலமாக தமிழகம் திகழ வேண்டும் என்று கூறியது. அந்நிய மரங்களை அகற்ற நபார்டு வங்கி ரூ.6 கோடியும், மத்திய அரசு ரூ.7 கோடியும் ஒதுக்கியுள்ளது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிமன்றம் மார்ச் 18-ஆம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைப்பதாக […]
