திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தில் இரு சக்கர வாகனம் மோதியதில் அரசு பேருந்து திடீரென்று தீ பற்றி எரிந்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அரசு பேருந்தின் டீசல் டேங்க் மீது இருசக்கர வாகனம் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்த மூன்று பேரில் பிரவீன் என்ற மாணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் பேருந்தில் இருந்த பலருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
