சிவகங்கை மாவட்டம் பூவந்தி அருகே மினிவேன்-மோட்டார் சைக்கிள் மோதலில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருமாஞ்சோலை கிராமத்தில் ஜேம்ஸ்பிரவீன்(24) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் மதுரையில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சிவச்சந்திரன் (24) என்ற நண்பர் இருந்தார். சிவசந்திரனும் அதே நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று காதணி விழாவில் கலந்து கொள்வதற்காக திருமாஞ்சோலைக்கு இருவரும் சென்றனர். அதன் பின் அங்கிருந்து மதுரைக்கு மோட்டார்சைக்கிளில் […]
