மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள டவுன் பகுதியில் இசக்கியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பேட்டை ம.தி.தா. இந்துக் கல்லூரிக்கு அருகில் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு சென்றுள்ளார். இதனையடுத்து இசக்கியப்பன் சிறிது நேரம் கழித்து வந்து பார்க்கும்போது மோட்டார் சைக்கிளை காணவில்லை. அதனை மர்ம நபர்கள் யாரோ திருடி சென்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்து இசக்கியப்பன் நெல்லை டவுன் குற்றப்பிரிவு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் […]
