மோட்டார் சைக்கிளில் சாகசம் செய்த 4 வாலிபர்கள் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். தூத்துக்குடி பீச் ரோட்டில் 4 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்று, சாகசங்கள் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் சம்பந்தப்பட்ட வாலிபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார். அந்த உத்தரவின்படி தூத்துக்குடி காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் மோட்டார் […]
