மருந்து வாங்குவதற்கு மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள வேப்பலோடை பகுதியில் ஆசீர்வாத செல்லையா என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு ரூபி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் ரூபி மருந்து வாங்குவதற்காக தனது உறவினரான சோலையப்பன் என்பவருடைய மோட்டார் சைக்கிளில் சென்றுவிட்டு திரும்ப வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். அப்போது ரூபி சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளானது திடீரென பழுதாகியதால் அங்குள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்து விட்டது. இந்த […]
