மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த விபத்தில் மூதாட்டி பலியாகிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சுப்பிரமணியபுரம் பகுதியில் 60 வயதுடைய முனியம்மாள் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் முனியம்மாள் தனது உறவினர் ஒருவரின் வீட்டில் துக்க நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேரனின் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்ப புறப்பட்டு பூசனூர் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது முனியம்மாள் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் திடீரென பழுதாகி விட்டதால் சாலையின் நடுவில் கவிழ்ந்து விழுந்து […]
