இந்தியாவில் நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவு நேற்று வெளியானது. இதில் பஞ்சாப் தவிர நான்கு மாநிலங்களில் பாஜக ஆட்சி அமைக்கிறது. இந்த மாபெரும் வெற்றியைக் கொண்டாடும் வகையில் டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் பிரதமர் மோடி தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது, “இந்த முறை தேர்தலில் மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடனும் சுதந்திரத்துடனும் பாஜகவுக்கு வாக்களித்து மாபெரும் வெற்றியடைய செய்துள்ளனர். இந்த ஆண்டிற்கான ஹோலி பண்டிகை இப்போதே தொடங்கிவிட்டது. இதற்காக […]
