சென்னை மடிப்பாக்கத்தில் மத்திய அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. அதில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழகத்தில் மத்திய அரசின் திட்டங்கள் எவ்வாறு செயல்படுத்தப்படுகின்றன? நேர்மையான முறையில் திட்ட உதவிகள் வழங்கப்படுகிறதா? என்று கண்டறிந்து வர பிரதமர் மோடி உத்தரவிட்டிருக்கிறார். இதற்காக 30 நாட்களில் 76 மத்திய அமைச்சர்கள் தமிழகம் வருகின்றனர். அதிலும் அடுத்த 20 நாட்களில் […]
