கொரோனா தடுப்பூசியை முதலில் மோடி போட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி எம்பி ஜோதிமணி வேண்டுகோள் விடுத்துள்ளார். உலகம் முழுவதும் கொரோனா பரவி வருவதால், தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் இறங்கி வருகின்றனர். இந்நிலையில் ஒரு சில நிறுவனங்களின் தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. இந்தியாவில் கோவிஷில்டு மற்றும் கோவாக்சின் தடுப்பு மருந்துகளுக்கு மத்திய அரசு அவசர அனுமதி அளித்துள்ளது. ஆனால் முறையான பரிசோதனை இல்லாமலே அவசரகதியில் அனுமதி வழங்கியதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த குழப்பங்களுக்கு […]
