ஏ.டி.எம் கார்டு மூலம் நூதன முறையில் மோசடியில் ஈடுபட்ட வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கீழ்வில்லிவலம் கிராமத்தில் ஏழுமலை என்பவர் வசித்து வருகிறார். இவர் வங்கியில் காலாவதியான தனது ஏ.டி.எ.ம் கார்டுக்கு பதிலாக புதிய ஏ.டி.எ.ம் கார்டை வாங்கியுள்ளார். அதற்கான ரகசிய நம்பரை பதிவு செய்வதற்காக ஏழுமலை அருகில் இருக்கும் ஏ.டி.எம் மையத்திற்கு சென்றுள்ளார். ஏ.டி.எம் இயந்திரத்தில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு இருந்ததால் ஏழுமலை அங்கிருந்த சரண்ராஜ் என்பவரை உதவிக்கு அழைத்துள்ளார். இந்நிலையில் உதவி […]
