போலி நகையை அடமானம் வைத்து மோசடியில் ஈடுபட்ட நபரை போலீஸார் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜேசுராஜா. இவர் முதல் மனைவியை பிரிந்த நிலையில் அனு என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் சென்ற ஆறாம் தேதி கருங்கலில் உள்ள நகைக்கடையில் 9 கிராம் எடையுள்ள இரண்டு காப்புகள் அடமானம் வைத்து ரூபாய் 60,000 பெற்றிருக்கின்றனர். கடையின் உரிமையாளர் சந்தேகமடைந்து நகையை உரசிப்பார்த்திருக்கின்றார். ஆனால் அசல் போலவே […]
