மொரீசியசில் விபத்துக்குள்ளாகி சிக்கி நிற்கும் கப்பலால் கடலில் சுற்றுச்சூழல் மாசுபடுவதாக ஜப்பான் அறிவித்துள்ளது. சென்ற மாதம் 25 ஆம் தேதி மொரீஷியஸின் தென்கிழக்கு கடற்கரையோரம் பவளப்பாறையில் மிட்சுய் ஓ.எஸ்.கே. நிறுவனத்தின் கப்பல் மோதியதில் எண்ணெய் கசிவு ஏற்பட்டது. இந்த விபத்திற்கு பின் மொரீசியஸ் கடற்கரையோரம் எண்ணெய் கசடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள ஜப்பான் பேரிடர் மீட்பு குழுவினர், விபத்துக்குள்ளாகி சிக்கி நிற்கும் கப்பல் மூலம் கசியும் எண்ணெய் மாசு காரணமாக கடல் சூழல் மேலும் பாதிப்படையக் கூடிய […]
