மொபட்டை ஓட்டிய சிறுமி மீது மினி லாரி மோதி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டியை அடுத்துள்ள கொண்டமநாயக்கன்பட்டியில் குருசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பாண்டிசெல்வி என்ற மகள் உள்ளார். 10ஆம் வகுப்பு படிக்கும் இவர் விளையாட்டுத்தனமாக வீட்டில் நிறுத்தப்பட்டு இருந்த தனது தந்தையின் மொபட்டை எடுத்து ஓட்டியுள்ளார். அப்போது அவரது உறவுக்கார சிறுமியான 7ஆம் வகுப்பு படிக்கும் ராகவியையும் ஏற்றிக்கொண்டு கொண்டமநாயக்கன்பட்டியில் இருந்து ஆண்டிபட்டி நோக்கி மொபட்டில் சென்றுள்ளார். இதனையடுத்து […]
