முன்னாள் முதலமைச்சர் புத்ததேவ் பட்டாச்சாரியா என்பவரின் மைத்துனி நடைபாதையில் வசித்து வரும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்குவங்க மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் புத்ததேவ் பட்டாச்சாரியா. இவர் பத்து ஆண்டுகளுக்கும் மேல் மேற்கு வங்கத்தில் முதல்வராக இருந்துள்ளார். இவருடைய மனைவியின் சகோதரி இரா பாசு. இவர் முப்பத்தி நான்கு வருடங்கள் பிரியநாத் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றியுள்ளார். முனைவர் பட்டம் பெற்றவர். 2009ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற பிறகு இவர் பாரா நகரில் வசித்து வந்துள்ளார். […]
