தேனி மாவட்டத்தில் திருப்பூரை நோக்கி சென்று கொண்டிருந்த கார் கட்டுப்பாட்டை இழந்து விபதடைந்ததில் ஒருவர் உயிரிழந்ததை தொடர்ந்து சிறுவன் உட்பட 3 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. திருப்பூர் மாவட்டம் வீரபாண்டி பகுதியில் ராஜா(38) என்பவர் அவரது மகன் நிரஞ்சனின் காதணி விழாவிற்கு அழைப்பிதழ் கொடுக்க நேற்று முன்தினம் திருப்பூரில் இருந்து தேனிக்கு அவரது மகன் நிரஞ்சனுடன் காரில் வந்துள்ளார். இந்நிலையில் காரை அவரது உறவினர் குமரவேல்(31) என்பவர் ஓட்டியுள்ளார். இதனையடுத்து தேனி மாவட்டம் கடமலைக்குண்டுவில் […]
