அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் தென்கொரியாவுக்கு பயணம் செய்த அடுத்த நாளே வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வடகொரியாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள தயாராகும் வகையில் அமெரிக்கா மற்றும் தென்கொரியாவின் கடற்படை கொரியா எல்லையில் கூட்டு போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கடந்த 25ஆம் தேதி குறுகிய தூரம் செல்லக்கூடிய பாலிஸ்டிக் ஏவுகணையை வடகொரியா சோதித்துள்ளது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் வடகொரியா நேற்று மீண்டும் ஏவுகணை சோதனையை மேற்கொண்டுள்ளது. இரண்டு […]
