சென்னை மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் செல்வதற்கான தடை வருகின்ற 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா பெருந்தொற்றின் காரணமாக ஊரடங்கினை அறிவித்த மத்திய மற்றும் மாநில அரசுகள் படிப்படியாக சில தளர்வுகளை கொண்டுவந்தன.இதனையடுத்து ஐந்தாம் கட்ட ஊரடங்கு தளர்வுகள் கடந்த சில நாட்களுக்கு முன் அறிவிக்கப்பட்டன.எனினும் கேளிக்கை விடுதிகள்,பூங்காக்கள் மற்றும் சுற்றுலாத் தலங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையானது நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மெரினா கடற்கரையில் மீன் விற்பனையை முறை செய்வது, கடற்கரையை சுத்தப்படுத்துவது போன்ற காரணங்களுக்காக கடற்கரைக்கு செல்ல அனுமதி […]
