மின்சார ரயில் சேவை அத்தியாவசிய பணி செல்பவர்களுக்கு மட்டும் இன்று வழக்கம்போல இயங்கும் என சென்னை ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. கொரோனா பரவலின் காரணமாக, ரத்து செய்யப்பட்டிருந்த மின்சார ரெயில்களை சென்னை ரெயில்வே கோட்டம் கொரோனா முன்கள பணியாளர்களுக்காக மட்டும் குறைந்த அளவில் இயக்கி வந்தது. இதையடுத்து அரசு ஊழியர்களுக்கும் பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டதால் மின்சார ரெயில் சேவைகளின் எண்ணிக்கை கூடுதலாக இயக்கப்பட்டது. இதையடுத்து தனியார் நிறுவன ஊழியர்கள், மாணவர்கள், பெண்கள் மற்றும் 12 வயதுக்கு […]
