பட்ட பகலில் வீடு கதவை உடைத்து 6 பவுன் தங்க நகையை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் கரையாம்புதூர் பகுதியில் சக்திவேல் (35) என்பவர் வசித்து வருகிறார். மெக்கானிக்கான இவர் சம்பவத்தன்று தனது மனைவி காந்திமதியுடன் (32) வீட்டை பூட்டிவிட்டு உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து மீண்டும் வீடு திரும்பிய போது வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சக்திவேல் வீட்டிற்குள் சென்று […]
