இந்தோனேசியாவிற்கு உரிய நீர்மூழ்கி கப்பலின் நிலை தொடர்பான அதிகாரபூர்வ தகவலை நாட்டின் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இந்தோனேசிய இராணுவத்திற்குரிய கே.ஆர்.ஐ நங்கலா 402 நீர்மூழ்கி கப்பல் கடந்த புதன்கிழமை அன்று பாலி தீவிற்கு அருகில் பயிற்சி மேற்கொண்டிருந்தபோது மாயமாகியுள்ளது. இதனைத்தொடர்ந்து இந்தியா, மலேசியா, சிங்கப்பூர் போன்ற பல நாடுகள் இந்த கப்பலை தேடும் முயற்சியை மேற்கொண்டிருந்தன. இந்நிலையில் இந்தோனேசிய கடற்படை அந்த நீர்மூழ்கிக் கப்பல் 53 நபர்களுடன் மூழ்கியது என்று உறுதிப்படுத்தியிருப்பதாக அந்த நாட்டின் ஜனாதிபதி Joko widodo […]
