தேனியிலிருக்கும் மூல வைகை ஆற்றில் நீரின் வரத்து குறைந்துள்ளது. தேனி மாவட்டம் கடமலை-மயிலை ஒன்றியத்திலிருக்கும் மூல வைகை ஆறு வெள்ளிமலை வனப்பகுதியிலிருந்து உற்பத்தியாகிறது. இந்நிலையில் வெள்ளிமலை வனப்பகுதியில் தொடர்ந்து பெய்த மழையின் காரணத்தால் கடந்த ஒரு ஆண்டிற்கும் மேலாகவே மூல வைகை ஆற்றிற்கு நீர்வரத்து இருந்துள்ளது. ஆனால் கடந்த சில மாதமாக அவ்வனப்பகுதியில் போதிய அளவிற்கு மழை இல்லை. அதற்கு மாறாக வெயிலினுடைய தாக்கம் அதிகமாக இருக்கிறது. இதனால் மூல வைகை ஆற்றுக்கு வரும் நீரின் அளவு […]
