கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையிலும் தென்கொரியா நாட்டில் தேர்தல் நடக்கப் பெற்று அதிபர் மூன் ஜே இன் தலைமையிலான ஆளும் கட்சி வெற்றி பெற்றுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக உலக நாடுகள் முக்கிய நிகழ்வுகள் பலவற்றை தள்ளிப்போட்டு உள்ள நிலையில் உலக நாடுகள் வியக்கும் வகையில் தென்கொரியா நேற்று நாடாளுமன்ற தேர்தலை நடத்தி உள்ளது. பிப்ரவரி மாதம் தென்கொரியாவில் தொற்றின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில் பல தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு அவற்றை கட்டுப்படுத்தி வெற்றியைக் கண்டது […]
