வங்காளதேசத்தில் 3 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டது. வங்காளதேச விடுதலைப்போர் 1971ஆம் ஆண்டு நடந்தது. அப்பொழுது அப்துல் அஜிஸ் என்ற ஹாபுல், அவரது சகோதரர் முகமது அப்துல் மாட்டின், அப்துல் மன்னன் என்ற மோனாய் ஆகியோர் இந்தியாவில் உள்ள பர்புஞ்சிக்கு பயிற்சிக்காக வந்துள்ளனர். இந்த பயிற்சியை முடிக்காமல் கிழக்கு பாகிஸ்தானுக்கு சென்றனர். இந்நிலையில் சுதந்திர வங்காளதேசத்தை உருவாக்க முயற்சி செய்த கொரில்லாகளுக்கு எதிராக பாகிஸ்தான் ராணுவத்தின் பக்கம் நின்று போரில் கலந்துகொண்ட ரசாக்கர் படையில் சேர்ந்தனர். […]
