மூதாட்டி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள வடுகபாளையம் பகுதியில் சின்னசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கருப்பாத்தாள் என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு கணவர் இறந்து விட்டதால் கருப்பாத்தாள் தனது மகன் வெள்ளிங்கிரி குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கருப்பாத்தாள் வயோதிகம் காரணமாக நோய் ஏற்பட்டு கடந்த சில மாதங்களாக அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் மனவேதனை அடைந்த கருப்பாத்தாள் தன் குடும்பத்தினரிடம் உடல் வலி தாங்க […]
