ஆண்டிபட்டி அருகே வீட்டை இடிக்க முயன்றதால் மூதாட்டி தீக்குளிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிப்பட்டியை அடுத்திருக்கும் சக்கம்பட்டி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த லிங்கராஜ் என்பவர் அப்பகுதியில் அரசுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து வீடு, கடை, மாட்டு கொட்டகை உள்ளிட்டவற்றை கட்டியதாக சொல்லப்படுகின்றது. இதனால் சிலர் அரசு இடத்தை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்கள். இவ்வழக்கை விசாரித்த நீதிபதி அரசு இடத்தை மீட்க நடவடிக்கை […]
