மகன் துரத்தி விட்டதால் மனமுடைந்த மூதாட்டி ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் கடமலைக்குண்டு அடுத்துள்ள சுப்பையாபுரம் பகுதியில் செல்லமாயி என்ற மூதாட்டி வசித்து வருகின்றார். இந்நிலையில் இவர் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மண்ணெண்ணெய் பாட்டிலுடன் வந்துள்ளார். இதனையடுத்து திடீரென மூதாட்டி மண்ணெண்ணையை உடலில் ஊற்றி கொள்ள முயன்றுள்ளார். இதனை பார்த்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் உடனடியாக மூதாட்டியை தடுத்து நிறுத்தி மண்ணெண்ணெய் பாட்டிலை பறிமுதல் செய்தனர். […]
