கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மூதாட்டியை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த 1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர். தேனி மாவட்டம் போடி அருகே உள்ள போஜன் பார்க் பகுதியில் போடி நகர் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் சந்தேகப்படும்படி மூதாட்டி ஒருவர் நின்று கொண்டிருந்துள்ளார். இந்நிலையில் காவல்துறையினர் அவரை பிடித்து விசாரணை நடத்தியதில் போடி கிழக்கு தெருவில் வசிக்கும் சரஸ்வதி என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவர் வைத்திருந்த பையை சோதனை செய்த போது […]
