மூதாட்டி கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள காமலாபுரம் கிழக்கு தோட்ட பகுதியில் சவரி அம்மாள் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் தண்ணீர் எடுப்பதற்கு சென்றுள்ளார். அப்போது சவரி அம்மாள் எதிர்பாராதவிதமாக கிணற்றுக்குள் தவறி விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் ஆத்தூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு […]
