நெஞ்சுவலியால் துடித்த மூதாட்டியின் உயிரை காப்பாற்றிய பேருந்து ஓட்டுநரை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள அந்தியூரில் இருந்து அரசு டவுன் பேருந்து நேற்று மதியம் ஈரோடு நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை ராஜா(40) என்பவர் ஓட்டி சென்றுள்ளார். கண்டக்டராக ராஜ்குமார்(38) என்பவர் பணியில் இருந்துள்ளார். இந்நிலையில் செம்புளிசாம்பாளையம் அருகே சென்றபோது திடீரென 60 வயது மூதாட்டி நெஞ்சுவலியால் துடித்தார். இதுகுறித்து தகவல் தெரிவித்தும் ஆம்புலன்ஸ் வர தாமதமானது. இதனால் ராஜா பேருந்தில் இருந்த 50 […]
