அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சீனாவில் நடந்து கொண்டிருக்கும் மனித உரிமை மீறல்களுக்கு சீனா பதில் சொல்லியே ஆகவேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். சீனாவிலுள்ள சின்ஜியாங் மாகாணத்தில் உய்குர் முஸ்லிம்கள் மீது செய்யப்படும் அட்டூழியங்கள் குறித்து தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அதிபர் ஜோ பிடன் பேசியபோது, சிறுபான்மையினர் சீனாவில் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்று அனைவரும் அறிவார்கள் என்று கூறியுள்ளார். இதற்காக உலகிற்கு சீனா பதில் அளிக்க வேண்டும் என்றார். மனித உரிமைகளுக்கு ஆதரவு கொடுத்து குரல் எழுப்புவதில் உலகளாவிய […]
