முழு கல்வி கட்டணமும் செலுத்த வேண்டும் என்று கூறும் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மெட்ரிகுலேஷன் பள்ளி இயக்குனரகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணத்தால் சென்ற மார்ச் மாதம் பதினைந்தாம் தேதி முதல் அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில் தனியார் பள்ளிகள் கட்டணத்தை செலுத்த வேண்டும் என்று பெற்றோர்களிடம் வற்புறுத்தி வருவதாக புகார்கள் எழுகின்றன. இதனால் தனியார் பள்ளிகள் சார்பாக நீதிமன்றத்தில் கட்டணம் வசூலிப்பதற்கு அனுமதி அளிக்க […]
