இந்தியா முழுவதிலும் உள்ள பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு, பகுதி நேர ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கு ஆகிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஒரு சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதை தொடர்ந்து ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் தற்போது அமலில் உள்ள ஊரடங்கு,வருகின்ற ஜூன் 14 ஆம் தேதி வரை நீட்டித்து அம்மாநில முதலமைச்சர் எடியூரப்பா உத்தரவிட்டுள்ளார். […]
