அடிப்படை நடவடிக்கைகளை செய்து தர வலியுறுத்தி பொதுமக்கள் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அடுத்துள்ள உலையூர் வடக்கு கிராமத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் அடிப்படை வசதிகளான சாலை, தெருவிளக்கு, குடிநீர், சுகாதாரம், மயான வசதிகள் மற்றும் போக்குவரத்து வசதிகள் போன்றவை முறையாக செய்து தர வலியுறுத்தி அப்பகுதியில் பல்வேறு முறை ஊராட்சி அலுவலகத்தில் புகார் அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த […]
