கர்நாடகா சித்ரதுர்கா முருகமடத்தின் விடுதியில் 2 சிறுமிகள் பயின்று வருகின்றனர். இச்சிறுமிகளை பாலியல் கொடுமை செய்ததாக மடாதிபதி சிவ மூர்த்தி முருகஸ்ரீ மீது குற்றம்சாட்டப்பட்ட சம்பவமானது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதை அடுத்து, அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதன்பின் போலீசில் சரணடைந்த சிவ மூர்த்தி முருகஸ்ரீ செப்டம்பர் 1 முதல் காவலில் வைக்கப்பட்டு இருக்கிறார். இதனிடையில் முருகஸ்ரீ மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் அதிகரித்துவரும் நிலையில், இப்போது மடத்தில் சமையல் பணியாளராக இருந்த […]
