பூஜையில் வைக்கப்பட்ட எலுமிச்சை பழங்கள் 69,000 ரூபாய்க்கு ஏலத்தில் விடப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள திருவெண்ணைநல்லூர் அருகே ஒட்டனேந்தல் கிராமத்தில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பிக்கப்பட்டு சிறப்பாக நடைபெற்றது. இந்த திருவிழாவின் 9 நாள் பூஜையிலும் முருகப்பெருமானின் கையில் இருக்கும் வேலில் ஒரு எலுமிச்சை பழம் வைக்கப்படும். அதன்பிறகு திருவிழா முடிவடைந்த பிறகு இந்த எலுமிச்சை பழங்கள் ஏலத்திற்கு விடப்படும். இதை குழந்தை பாக்கியம் வேண்டி ஒரு […]
