முயலை வேட்டையாடிய பெண் உள்பட 4 பேருக்கு வனத்துறையினர் அபராதம் விதித்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள புண்ணியவாளன்புரம் பகுதியில் வனத்துறையினருக்கு சிலர் முயல் வேட்டையில் ஈடுபடுவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி நெல்லை – கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது புண்ணியவாளன்புரம் பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் பெண் உள்பட 4 பேர் வேட்டை நாய்களுடன் நின்று கொண்டிருந்தனர். இதனையடுத்து வனத்துறை அலுவலர்கள் அவர்களை பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். […]
