அரசு ஒப்பந்ததாரரை தாக்கியவர்களை கைது செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள வேடசந்தூர் பகுதியில் உள்ள எரியோட்டையில் பழனிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் நாடார் சங்கத்தின் நிர்வாகியாகவும் அரசு ஒப்பந்ததாரராகவும் இருந்து வருகிறார். இவர் இந்த பகுதியில் இருக்கும் விநாயகர் கோவிலின் முன்பாக அமர்ந்து சிலருடன் பேசி கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் சிலர் பழனிச்சாமியை அரிவாளால் வெட்டி கொடூரமாக தாக்கியுள்ளனர். […]
